பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கள்ளப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் மகன் கிருஷ்ணகுமார் (14). இவர் சேலம் மாவட்டம் வீரகனூரில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று காலை கிருஷ்ணகுமார் பள்ளியில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் மாலையில் வீடுக்கு திரும்பி வரவில்லை. இதனால் மாணவனின் தந்தை பெருமாள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பெருமாள், அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் தங்கவேல் மாணவனை யாரேனும் கடத்தி சென்றனரா? கோணத்திலும் என விசாரணை நடத்தி வருகிறார்.