Poisonபெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கிழுமத்தூரை சேர்ந்தவர் நாரயணசாமி மகன் வீரமுத்து(40) விவசாயியான இவர் தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

இதனிடையே கடந்த சில வருடங்களாக காசநோயால் பாதிக்கப்பட்டுஅவதிக்குள்ளாகி வந்த வீரமுத்து மனமுடைந்து நேற்று இரவு விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதனையறிந்த அவரது உறவினர்கள் வீரமுத்துவை மீட்டு உயிருக்குஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி இன்று காலை வீரமுத்து இறந்தார். இது குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!