பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள அரும்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் (57), வைக்கோல் வியாபாரி. குடிப்பழக்கம் உள்ள இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு ஏதும் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து இவரது மனைவி ராணியிடம் குடும்பத்தகராறில் ஈடுபட்டதாக கூறபடுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த தேவராஜை அவரது மனைவி ராணி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தேவராஜ் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ராணி கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் எஸ்.எஸ்.ஐ., சண்முகம் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.