100 kg of explosives stored in a field near Perambalur exploded and scattered!
பெரம்பலூர் அருகே பீல்வாடி கிராமத்தை சேர்ந்த கருப்பையா என்பவருக்கு சொந்தமான வயலில், கரும்பு அறுவடை செய்யப்பட்டிருந்தது.
காய்ந்த சருகுகளை எரிப்பதற்காக தீ வைத்த போது பக்கத்து வயலில் பதுக்கி வைத்திருந்த கிரைனைட் குவாரிக்கு சொந்தமான 100 கிலோ வெடி பொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனால் பீல்வாடி, சித்தளி, எழுமூர், அருமடல் ஆகிய கிராமங்களில் பரபரப்பு நிலவியது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வருவாய் துறையினர், புவியியல் மற்றும் சுரங்கத்துறையினர் மற்றும் காவல்துறையினர் நேரில் சென்று நடத்தி வருகின்றனர்.