A bus stop racket busted near Perambalur was arrested || பெரம்பலூர் அருகே பேருந்து நிழற்குடையை இடித்து தரைமட்டமாக்கியவர் கைது

பெரம்பலூர் அருகே உள்ள மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயராஜன் (வயது 45). விவசாயிஃ இவரது வீட்டை ஒட்டிய நிலையில் பேருந்து நிழற்குடை கடந்த 20 இருபது வருடங்களாக உள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் நீதிமன்றத்தில், வீட்டையொட்டி பேருந்து நிழற்குடையை பொதுமக்களுக்கு பயன்படும் விதமாகவும், சேதமின்றியும் பயன் கொடுத்தி கொள்ள அறிவுறித்திருந்தது. விஜயராஜனோ, பேருந்து நிழற்குடையை இடித்து தரைமட்டமாக்கி விட்டு, அங்கு ஆழ்துளை கிணறு அமைத்து பயன்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் விஜயராஜனை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!