AIADMK councilors walk out of Perambalur, condemning councilors, including chairman, for leaving cinema
பெரம்பலூர் நகராட்சியின் கூட்டத்திற்கு இன்று அழைப்பின் பேரில், அனைத்து கவுன்சிலர்களும் வந்திருந்தனர். ஆனால், திடீரென நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், உள்ளிட்ட திமுகவினர் , உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி படத்திற்கு சென்றனர். இதனால், திமுக, சுயேட்சை மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக கவுன்சிலர்கள் அப்செட் ஆனார்கள். கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து விட்டு மக்கள் பணி குறித்து விவாதிக்காமல், காலை 11 மணி காட்சிக்கு படத்திற்கு தியேட்டருக்கு சென்றதை கண்டித்தும் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதை அறிந்த, நகராட்சி தலைவர், துணைத் தலைவர் படத்தின் இடைவேளையில் வந்ததால், நகராட்சி ஊழியர்கள் நகராட்சி கூட்டத்தை நடத்தி நகராட்சிக்கு உட்பட்ட சொத்துகளுக்கு வரியை உயர்த்துவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக உறுப்பினர்கள் பகுதியில் அடிப்படை பணிகள் நடத்தப்படாதை கண்டித்தும், நகராட்சியில் சொத்து வரி உயர்த்துவது குறித்து விவாதிக்காமலும், தன்னிச்சையாக செயல்படுவததை கண்டித்தும் வெளிநடப்பு செய்தனர். இதனால் நகராட்சி அலுவலகம் சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது. மீண்டும், இடைவேளையில் விட்ட நெஞ்சுக்கு நீதி படம் பார்க்க தலைவர் உள்ளிட்டோர் சென்றனர்.