ariyalur woman hangs near in perambalur!
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் அருகே உள்ள ஓடையில் உள்ள மரத்தில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கி கொண்டிருப்பதாக பெரம்பலூர் போலீஸாருக்கு வந்த தகவல் பேரில், அங்கு சென்ற போலீசார் இளம்பெணின் சடலத்தை மீட்டனர். போலீஸார் விசாரணையில், இறந்த பெண் அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சதீஷ் மனைவி வசந்தி (27) என்பது தெரியவந்தது. இதுகுறித்து சதீஷ் அளித்த புகாரின்பேரில், வசந்தி கொலை செய்யப்பட்டாரா, அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.