பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை ஆகிய இரு இடங்களில் மனிதக் கழிவில் இருந்து உயிர் எரிவாயு எடுக்கும் திட்டத்தை பெரம்பலூர் நகராட்சி தொடங்கி உள்ளது.
25 மதிப்பில் தொடங்கி உள்ள இத்திட்டத்தில் முதற்கட்டமாக அம்மா உணவங்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா ஒரு கேஸ் சிலிண்டர் வீதம் 60 சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன. அதனை குறைக்கும் வகையில் இந்த உயிர் எரிவாயு திட்டம் பயன்படுத்தபட உள்ளது.
மேலும் இத்திட்டம் வெற்றி பெறும் வேளையில் படிப்படியாக அரசின் பல்வேறு திட்டங்களில் பயன்படுத்தப்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.