பெரம்பலூரில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா
பெரம்பலூர் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் 127 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, பாவேந்தர் இலக்கியப் பேரவை சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு தலைவர் கவிச்சிட்டு வேல்.இளங்கோ, செயலளர் ஓவியர் கி.முகுந்தன் ஆகிய இருவரும் மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.
தமிழாசிரியர் மூ.பிச்சைப்பிள்ள வரவேற்றார். பாவேந்தர் சிறப்பையும், பாடல்களின் மாண்பையும், கவிஞர் முத்தரசன், ஓய்வு பெற்ற அக்ரி ஆறுமுகம், பேராசிரியர் செல்வக்குமார், கவிஞர் அகவி, எடுத்துரைத்தனர்.
கவிஞர்கள் தேவன்பு, தேனரசன், ஆசிரியர் சிவானந்தம், மதுரை குமார், மற்றும் தங்கராசு, அண்ணாதுரை, படைஞர் பெரியசாமி, துரை.மகேந்திரன், இலக்குவணன், யுவராசு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இணைச் செயலாளர் செ.சிங்காரவேலு நன்றி கூறினார்.