Chief Minister Jayalalithaa’s in Perambalur be near perfect to get better lighting 1008 Agal vilakku pooja by Admk cadress

perambalur-admk-pooja_1
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி பெரம்பலூர் அருகே அதிமுகவினர் 1008 அகல் விளக்குகளை ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்தனர்.

முதல்மைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி பெரம்பலூர் மாவட்டம், சித்தளியில் உள்ள முருகன் கோவிலில் மாவட்ட அம்மா பேரவை சார்பில் 1008 அகல் விளக்குகளை ஏற்றி சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிசேகங்கள் நடந்தது. மாவட்டச் செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் இந்த பூஜைகள் நடைபெற்றது.

மாவட்ட அம்மா பேரவைத் தலைவர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி, முன்னாள துணை சபாநாயகர் ஆ. அருணாசலம், உள்ளிட்ட பல முக்கிய அதிமுக பிரமுகார்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!