Corona relief on behalf of for Perambalur district photographers; Presented by RT Ramachandran MLA.
மத்திய, மாநில அரசுகளால் கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 68 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த புகைப்பட கலைஞர்களின் கோரிக்கையை ஏற்று, அதிமுக பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் 200க்கும் மேற்பபட்ட அவர்களுக்கு தலா 10 கிலோ அரிசியும், ரூ.500ம் ரொக்கமாக வழங்கினார். அப்போது புகைப்பட கலைஞர்கள், அதிமுக கட்சியினர் பலர் உடனிருந்தனர்.