பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி விடுத்துள்ள தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதலுக்கான கலந்தாய்வு பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இக்கலந்தாய்வில் நெற்குணம் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் செல்வகுமார் அரசு மேல்நிலைப்பள்ளி அனுக்கூருக்கும், காரை அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ந.சுசீலா அரசு மேல்நிலைப்பள்ளி வேப்பந்தட்டைக்கும்.

கூத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் எஸ்.பிரபாகரன் அரசு மேல்நிலைப்பள்ளி காரைக்கும், அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் எம்.மகாலெட்சுமி இலப்பைக்குடிக்காடு (பெ) மேல்நிலைப்பள்ளிக்கும்,

பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் சுந்தரம் அரசு மேல்நிலைப்பள்ளி கவுள்பாளையத்திற்கும், மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் மூலம் துங்கபும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செல்லமுத்து திருச்சி மாவட்டம் சிறுகான்பூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், கலந்தாய்வு மூலம் மாறுதல் பெற்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!