family Dispute farmer hanged in perambalur near!

suicide-Hangingபெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது33) இவரது மனைவி மஞ்சுளா (28). இவர்களுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. விவசாயத் தொழில் செய்து வரும் இவர்களிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் இன்று கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் மஞ்சுளா வயலுக்கு சென்றுவிட்டார். மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது செல்வராஜ் வீட்டிற்குள் தூக்கு கயற்றில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்த கை.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வராஜியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!