Female cleaning worker’s husband committed suicide by hanging
பெரம்பலூர் நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் சின்னபொன்னு, இவரது கணவர் மெய்யப்பன் அடிக்கடி குடித்து விட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில நேற்றும் குடும்பத் தகராறில் ஈடுபட்டுள்ளார். இன்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. காலை பார்த்த போது அவர்கள் வசிக்கும் ஆலம்பாடி சாலை புதுக்காலணி பகுதியில் உள்ள வீட்டின் அருகே மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கினார்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மெய்யப்பனின் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.