suicide-Hanging பெரம்பலூர் அருகே தீராத நோயால் அவதிப்பட்ட விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பெரம்பலூர் மாவட்டம, வேப்பந்தட்டை வட்டம், பில்லங்குளத்தை சேர்ந்தவர் பெரியசாமி(55)

விவசாயி.இவருக்கு நீண்ட நாட்களாக நீரழிவு நோய் இருந்துள்ளது.இதனால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளான அவர் மனம் வெறுத்து காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வயலுக்கு சென்று அங்குள்ள கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலைசெய்துகொண்டார்.

இது குறித்து தகவல் தெரிந்த கை.களத்தூர் போலீசார் பிள்ளங்குளம் சென்று பெரியசாமியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.இது குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!