Gurupuja for the Sekkizhar in Perambalur!

பெரம்பலூர் நகரில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள நாயன்மார் உட்கோவிலில் அமைந்துள்ள சேக்கிழார் பெருமானுக்கு இன்று பெரம்பலூர் தர்ம பரிபாலன சங்கத்தின் சார்பில் குருபூஜை விழா அதனை முன்னிட்டு உற்சவர் மற்றும் மூலவருக்கு காலை10.30 மணியளவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பகல் 12.30 மணியளவில் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது முன்னாள் அறங்காவலர் தெ.பெ.வைத்தீஸ்வரன் உட்பட திரளான பக்தர்கள், சிவன் அடியார்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!