Heavy rain with strong winds in Perambalur district: It rained at midnight!
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கோடை மழை பெய்து, பூமியை குளிர செய்தது. அக்னி நட்சத்திர வெப்பத்தில் வாடிய மக்களுக்கு இது பெரும் ஆறுதலாக இருந்தது. குளுமையாக தட்பவெப்ப நிலை மாறியதால், மக்கள் புழுக்கம் குளிர் காலத்தில் உறங்குவது போன்று நிம்மதியாக தூங்கி எழுந்தனர். வானம் மேகமூட்டத்துடன் இன்று பகல் பொழுதிலும் இருந்ததால் வெப்பத்தின் தாக்கம் அதிகளவிற்கு இல்லை.