In Perambalur City officials step will be taken to remove soil particles flying off the road?

பெரம்பலூர் நகர முக்கிய சாலைகளான ஆத்தூர் சாலை, துரையூர் சாலை, துரைமங்கலம் சாலை, புதிய, பழைய பேருந்து நிலையம், நான்கு ரோடு, 3 ரோடு பகுதிகளில் படிந்துள்ள மண் துகள்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாள்தோறும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணித்து வரும் இந்த சாலைகளின் இருபுறங்களிலும், சாலை மையத் தடுப்புச் சுவர் பகுதிகளிலும் அதிக அளவில் மண் துகள்கள் குவிந்து கிடக்கின்றன. இவை காற்று வீசும் போது சாலைகளில் பறக்கினறன. இவற்றால், வாகன ஓட்களும், பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். அதோடு மட்டுமிலலாமல், விபத்துகள் ஏற்படுத்தும் வகையில் சாலையில் குவிந்து கிடக்கும் மண்ணை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!