In Perambalur MGR 100th birthday
பெரம்பலூரில், எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன், தலைமையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் பெரம்பலூர் எம்.எல்.ஏ இரா.தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர் கர்ணன் உள்ளிட்ட ஏரளாமான அதிமுகவினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதுபோல் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் படங்களுக்கு அதிமுகவினரும், அவரது ரசிகர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.