In the Tamil Nadu Farmers Association demands picket in Perambalur

பெரம்பலூர் : வரலாறு காணாத வறட்சியால் கடும் குடிநீர் பஞ்சம், ஏக்கருக்கு 25 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா; என்.செல்லதுரை தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஏ.கே.ராஜேந்திரன் கரும்பு விவசாயிகள் மாவட்ட செயலாளர் அன்பழகன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் எ.கலையரசி, வாலிபர் சங்கம் எஸ்.பி.டி.ராஜாங்கம், தீண்டாமை ஒழிப்பு முண்ணனி பி.கிருஷ்ணசாமி, எம்.கருணாநிதி மின் ஊழியர் மத்திய அமைப்பு எஸ்.அகஸ்டின் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!