Jamabandi in Perambalur district: Collector’s announcement!

பெரம்பலூர் மாவட்டத்தில் 1431 ஆம் பசலி ஆண்டு வருவாய் கிராமங்களுக்கான தீர்வாயம் (ஜமாபந்தி) 25.05.2022 அன்று காலை 9.00 மணியளவில் துவங்குகிறது என கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களிலும் 25.05.2022 முதல் 27.05.2022 வரை நடைபெற உள்ளது. பெரம்பலூர் வட்டத்தில் தனது (கலெக்டர் வெங்கடபிரியா), தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நா. அங்கையற்கண்ணி தலைமையிலும், குன்னம் வட்டத்தில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பால்பாண்டி தலைமையிலும், ஆலத்தூர் வட்டத்தில் கலால் உதவி ஆணையாளர் அ. ஷோபா தலைமையிலும் நடைபெற உள்ளது, என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!