National Olympic Games Tournament Participants in Perambalur players
தேசிய அளவிலான சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு அணி சார்பாக பெரம்பலூர் வீரர்கள் பங்கேற்கின்றனர்.
பெரம்பலூர் : தேசிய அளவிலான சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் மாவட்ட விளையாட்டரங்கில் 03.06.2017 முதல் 10.06.2017 வரை நடைபெற உள்ளது. இப்போட்டிகளுக்கு பெரம்பலுhh; மாவட்ட விளையாட்டு வீரா;, வீராங்கனைகள் எஸ்.கலைச்செல்வன், பி.இரமேஸ், ஆர்.சூர்யா, எ.அம்பிகா, ஆர்.தீபா, கே.மணிகண்டன், எஸ்.சுப்ரமணி, ஆகியோர் தமிழ்நாடு அணி சார்பாக கலந்து கொள்ள உள்ளனர்.
தேர்வுச் செய்யப்பட்டுள்ள வீரர், வீராங்கனைகள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம.இராமசுப்பிரமணியராஜாவை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்ர. தேர்வுச் செய்யப்பட்ட வீரர் வீராங்கனைகளுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சீருடை அளித்து சிறப்பித்தார்.