panguni Uttra Festival: Matana Gopala Swamy Temple Flag Hoist in perambalur
பெரம்பலூரில் சிறப்பு வாய்ந்த அருள்மிகு மரகதவல்லி தாயார் உடனுறை மதனகோபால சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அங்குரார்ப்பணத்துடன் தொடங்கி இவ்விழா இரண்டாம் நாள் திருவிழாவிற்கு பிராமணர்கள் சங்கத்தின் சார்பில மண்டகப்படி நடைபெற்றது. இன்று இரவு ஹம்ச வாகனத்தில் திருவீதி உலா நடக்கிறது. பங்குனி உத்திரத் தேர்திருவிழா வரும் ஏப்.10ம் தேதி நடக்க உள்ளது.