Perambalur: 2 boys die after falling into a water tank next door!

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். அந்த வீட்டில், தண்ணீர் சேமிக்க நிலத்தடியில் நீர்த் தேக்க தொட்டி அமைத்துள்ளார். இன்று மாலை அதே பகுதியை சேர்ந்த உறவினர்களான மகிழன் (5), பவின் (5) ஆகிய இருவரும் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் தவறி அருகில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. விழுந்த சிறுவர்கள் இருவரும் தண்ணீருக்குள் மூழ்கி இறந்து விட்டனர். இதை அறிந்த அவர்களின் பெற்றோர்கள் அலறி துடிதுடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சிறுவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துடன், வழக்குப் பதிவு செய்து தீவிர விசாணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.










kaalaimalar2@gmail.com |
9003770497