accident_15
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள அரும்பாவூர் மேட்டூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(50). இவரது உறவினர் ஒருவர் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக ராமகிருஷ்ணன், தனது அண்ணன் செல்வராஜின் மகன் ராஜேஷ்(17), தேவராஜ் மகன் வினோத் ஆகியோருடன் பெரம்பலூர் சென்றனர். 3 பேரும் பைக்கில் சென்று, பார்த்து விட்டு நேற்றிரவு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

பெரம்பலூர் கோனேரிபாளையம் புற வழிச்சாலை பகு தியில் சென்ற போது, எதிரே வந்த அமரர் ஊர்தி வேன், பைக்குகள் மீது மோதி யது. இதில் பைக்கில் வந்த 3 பேரும் படு கா யமடைந்தனர். அவர்களை அவ்வழியே வந்த காய்கறி வியாபாரிகள் மீட்டு முதலுதவி அளித்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்திற்கு காரணமான அமரர் ஊர்தியை ஓட்டி வந்த கோபாலி டம் விசாரித்து வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!