Perambalur Collector congratulates the winning Disabled Kabaddi team!
4வது தேசிய அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான கபடி போட்டி சென்னையில் நடந்தது.
16 மாநில அணிகள் பங்கேற்ற போட்டியில், பெரம்பலூர் மாவட்ட பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்ற தமிழ்நாடு சீனியர் மாற்றுத் திறனாளிகள் கபடி அணியினர் வெற்றி பெற்றனர்.
மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கலெக்டர் வெங்கடபிரியாவிடம் வெற்றி கோப்பையினை காண்பித்து பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் பெற்றனர்.