பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த க.முனுசாமி சென்னையில் உள்ள தொடக்கக் கல்வி இயக்கத்தின் துணை இயக்குநராக பணிமாறுதல் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த தி.அருள்மொழிதேவி பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதனடிப்படையில் இன்று பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக தி.அருள்மொழிதேவி பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய முதன்மைக் கல்வி அலுவலருக்கு கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.