Perambalur district DMK executives pay floral tributes to teenager who died in lightning strike!

பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் பகுதியில் இடி-மின்னல் தாக்கியதில் மரத்தடியில் இருந்த வாலிபர்களான, பெரம்பலூர் கம்பன் நகரை சேர்ந்த செல்லதுரை, கவுள்பாளைம் கிராமத்தை சேர்ந்த ராமர் இருவரும் பலியானர்கள்.

கவுள்பாளையம் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த ராமர் என்பவரது உடலுக்கு, திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோர் தலைமையில் திமுகவினர் மலரஞ்சலி செலுத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், ஒன்றிய செயலாளர் எஸ்.அண்ணாதுரை, ஒன்றிய குழு உறுப்பினர் ஆர். கலையரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!