Perambalur: Hindu Religious Endowments Department Inspectorate Building: Chief Minister M.K. Stalin inaugurated it!

இந்து சமய அறநிலையத்துறையின் 2022 – 2023 சட்டமன்ற அறிவிப்பு எண் 62-ன் படி ரூ.12 லட்சம் மதிப்பில் வாலிகண்டபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வேப்பந்தட்டை ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ ஜெகதீசன், மாவட்ட பொருளாளர் வாலிகண்டபுரம் ரவிச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர், மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் டி‌.ஆர் சிவசங்கர், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெகதீஸ்வரன், மற்றும் தென்றல் ரவி, அழகாபுரி பாலசுப்பிரமணியன், உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!