#Perambalur In the furniture store fire burning in the damage of 40 lakh
பெரம்பலூரில் பர்னிச்சர் கடையில் தீவிபத்து ஏற்பட்டதில் 40 லட்சம் மதிப்பலான பொருட்கள் எரிந்து சாம்பலானது

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழியில் , சிறுகுடலை சேர்ந்த தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடை இயங்கி வருகிறது.

இதில் இன்று மதியம் ஏற்பட்ட தீடீர் தீவிபத்தில் பர்னிச்சர் கடையில் இருந்த கட்டில், மெத்தை, உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமானது.

எரிந்த பொருட்களின் மதிப்பு சுமார் 40 லட்சம் இருக்கமென கூறப்படுகிறது. இது தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்ப இடத்திற்கு சென்று கடையில் தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

இது பெரம்பலூர் போலீசார் வழைக்கு பதிவு செய்து தீவிபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!