பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 45).

இன்று இவர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மொபட்டில் தீரன் பகுதியில் இருந்து பெரம்பலூரை நோக்கி எதிர் திசையில் வந்து கொண்டிருந்தார்.

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்து காரும் புஷ்பராஜ் வந்து கொண்டிருந்த பைக்கும் மோதிக் கொண்டது.

இதில் புஷ்பராஜுடன் உடன் பயணித்த சாரதா (வயது 35) ஆகிய இருவரும், தூக்கி வீசப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசர் தீயணைப்பு மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காயமடைந்த புஷ்பராஜை மீட்டு பெரம்பலூர் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சிகிச்சை பெற்று வந்த புஷ்பராஜ் உயிரிழந்தார். உடன் பயணித்த சாரதா புறநோயாளியாக சிகிச்சை பெற்றார்.

இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!