Perambalur: Public relations camp led by the Collector in Thondaimandurai village!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட தொண்டமாந்துறை (மேற்கு) கிராமத்தில் 08.01.2025 (புதன் கிழமை) அன்று கலெக்டரின் தலைமையில், மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது. அதற்காக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, தொண்டமாந்துறை (மேற்கு) மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை தொண்டமாந்துறை (மேற்கு) கிராம நிர்வாக அலுவலகத்தில், முகாம் நடைபெறும் நாளிற்கு முன்னதாகவே வருவாய்த்துறை அலுவலர்களிடம் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.