Perambalur: SBCID Inspector Jagatheesan dies of a heart attack!

பெரம்பலூர் SBCID போலீஸ் இன்ஸ்பெக்ராக வெ. ஜெகதீசன் (50), இவர் அரியலூர் மாவட்டம, கொளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர். 2000 ம் ஆண்டு காவல் துறையில் பணிக்கு சேர்ந்தார். இன்று மாலை 18.30 மணி அளவில் அலுவலகத்தில் பணியில் இருந்த போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இன்பெக்டர் ஜெகதீசன் உயிரிழந்தார். அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது சொந்த ஊரான கொளப்பாடியில் நாளை துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. இவரது மரணத்தால் மாவட்ட போலீசார் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497