Perambalur: Sensational verdict in 22-year-old case; 4 weeks in jail for the culprit; Rs. 10 thousand fine! SP praises the police for getting the punishment!

கடந்த 2003 -ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட சிலை திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு 4 வாரம் சிறை தண்டனை மற்றும் ரூபாய்.10000 அபராதம் விதித்து தண்டனை வழங்கிய சென்னை எழும்பூர் தலைமை பெருநகரக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு நேற்று வழங்கி உள்ளது.

கடந்த 2003 – ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம், கோவில்பாளையம் கிராமத்தில் உள்ள தோழிஸ்வரர் சிவன் கோவிலில் சிலை காணாமல் போனதாக, அக்கிராமத்தைச் சேர்ந்த செங்கமலை என்பவரின் மகன் ராமசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் குன்னம் போலீசார் குற்றஎண். 216/2003-ன்படி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தியதில், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த, சடையப்பன் மகன் வெங்கடேசன் (40 வயது 2003ல் ) மற்றும் உடையார்பாளையம் அருகே உள்ள இலையூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் தங்கமணி ( 48 வயது 2003ல் ) இருவரும் சிலை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து, இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இவ்வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்ற விசாரணையில் இருந்த மேற்படி வழக்கில் நேற்று 13.06.2025-ம் தேதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வழக்கின் குற்றவாளிகள் A1. வெங்கடேசன் இறந்த நிலையில், A2. தங்கமணி என்பவருக்கு 4 வாரம் சிறைதண்டனையும், ரூபாய் 10,000 அபராதத்தையும் விதித்து சென்னை எழும்பூர் தலைமை பெருநகரக் குற்றவியல் நடுவர், நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கில் சிறப்பாக செயல்பட்டு எதிரிக்கு தண்டனை பெற்றுத் தந்த குன்னம் போலீசாரை, எஸ்.பி ஆதர்ஷ் பசேரா பாராட்டினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!