Perambalur: Training for Group 2, 2A exams through TAHDCO: Collector information!

  •  

தாட்கோ முன்னெடுப்பாக முன்னனி பயிற்சி நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணக்கர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்2, 2A தேர்வுகளுக்கும், இத்தேர்வுகளில் முதல் நிலை தேர்வில் (Preliminary exam) தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்விற்கு (Main) தேர்ச்சி பெற விரும்பும் மாணாக்கர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது

        இப்பயிற்சியை பெற பட்டப்படிப்பில்  தேர்ச்சி பெற்றவர்களும், 21 முதல் 32 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்,  விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான  செலவீன தொகையும் தாட்கோவால் மேற்கொள்ளப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்திட www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பித்து பயிற்சி பெற்று பயனடையுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!