பெரம்பலூர் மாவட்டம், பீல்வாடி கிராமத்தை சேர்ந்த அசோகன் மகன் ஆசைத்தம்பி என்பவர் அக்கிராம பொது மக்கள் சார்பாக, மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில் கோரப்பட்டுள்ளதாவது:
சித்தளி ஊராட்சியில் இயங்கி வரும் பீல்வாடி கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்றும், உள்ளாட்சியின் துறையின் சார்பாக மக்களுக்காக வழங்கப்படும் மக்கள் நல பணிகளில், பீல்வாடி கிராமத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என்றும், மாற்றாக சித்தளி கிராமத்திற்கே முன்னுரிமை அளிப்பதாகவும், பீல்வாடி கிராமத்தை புறக்கணிப்பதாகவும், பீல்வாடி கிராமத்தில் 3ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிப்பதாகவும், . வாக்காளர் பட்டியலில் சுமார்1500 பேரும், 650 குடும்ப அட்டைகளும் உள்ளது.
சித்தளி ஊராட்சியில் எங்கள் கிராமத்தை இணைத்துள்ளதால், பீல்வாடி கிராமத்திற்கு தேவையான அளவு உள்ளாட்சி பிரதிநிதி, ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், உள்ளிற்ற பதவிகளை இதுவரை எங்கள் ஊரில் எட்டா கனியாக உள்ளது. ஆகையால் எங்களது கிராம மக்களுக்கு தேவையான வசதிகளை உள்ளாட்சி துறை மூலம் பெறவும், எங்கள் ஊராட்சியில் எட்டாக் கனியாக உள்ள தலைவர், துணை தலைவர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகள் எங்கள் ஊராட்சி மக்கள் பெறுவதற்கு ஏதுவாக மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.