police protection to the wineshop, which opened today at the Women’s siege near in perambalur ||பெரம்பலூர் அருகே பெண்கள் முற்றுகையால் இன்று திறக்கப்பட்ட மதுக்கடைக்கு போலீஸ் பாதுகாப்பு

பெரம்பலூர் அருகே உள்ள அருமடல் பிரிவு சாலையில் புதிதாக மதுக்கடை இன்று டாஸ்மாக் சார்பில் திறக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து முன்பே பெண்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தி எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று புதிதாக அருமடல் சாலையில் மதுக்கடை திறக்கப்பட்டது. இதனை கண்டு ஆத்திரம் அடைந்த பெண்கள் ஒன்று திரண்டு இன்று மதுக்கடையை முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அரசு அலுவலர்கள், மற்றும், பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சு நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து சாதுர்யமாக கலைந்து போக செய்தனர்.

திருப்பூரில நேற்று நடந்த சம்பவம் போன்று மதுக்டையை பொதுமக்கள், பெண்கள் சூறையாடி விட்டால் என்ன நினைத்து மதுக்கடைக்கு பெரம்பலூர் போலீசார் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!