R.Tamilselvan MLA inaugurated the water Bunk set up on behalf of the Perambalur AIADMK Town

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே, நகர அதிமுக சார்பில் கோடைக்கால நீர் மோர் பந்தலை எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார். பின்னர் தர்ப்பூசணி, வெள்ளரி, இளநீர், மோர், ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் சந்திரகாசி, பூவை.செழியன், அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த வீரபாண்டியன், லாடபுரம் கருணாநிதி, மகளிர் அணி, இளைஞர் இளைஞிகள் எழுச்சி பாசறை பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர், சித்தளி அழகரசு உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!