School boy killed in sandstorm near Perambalur
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம்சீகூர் கிராமத்தின் வழியாக செல்லும் வெள்ளாற்றில், புதை மணலில் சிக்கி அரியலூர், கல்லக்குடி சாலையில் வசித்து வந்த
கலையரசன் மகன் ஹரிரோஷன்(10), என்பவர் உயிரிழந்தார். அகரம்சீகூரில் உள்ள அவரது சித்தப்பா இளையராஜா வீட்டிற்கு வந்த நிலையில், வெள்ளாற்றில் குளிக்க சென்ற போது புதை மணலில் சிக்கி ஹரிரோஷன் உயிரிழந்துள்ளார். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் ஹரிரோஷனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மங்களமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.