பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் ஊராட்சிக்கு உட்பட்டது காந்தி நகர். அப்பகுதி மக்களுக்கு ஊராட்சி சார்பில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து இன்று பெரம்பலூர் புறவழிச் சாலையில் இன்று காலை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வருவாய் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.