Shakti Mariamman Temple is a special Balpishekam in Perambalur || பெரம்பலூர் சக்தி மாரியம்மன் கோவில் சிறப்பு பாலபிஷேகம் நடைபெற்றது.

பெரம்பலூர் புதிய மதன கோபலபுரத்தில் அருள்மிகு சக்தி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் இன்று பால்குடம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரம்பலூர் மதன போபாலபுரத்தில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டிகளை முக்கிய வீதிகள் வழியக எடுத்து வந்து சக்தி மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். சக்தி மாரியம்மனுக்கு பூ ஊஞ்சல் அலங்காரம், மற்றும் சிறப்பு பூஜைகள் அன்னதானம் நடைபெற்றது. பின்னர் மாலை வேளையில் சந்தனகாப்பு அலங்காரம், மாவிளக்கு பூஜைகள் நடந்தது. சக்தி மாரியம்மன் திருவீதி உலாவும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் முன்னாள் நகராட்சித் தலைவர் பொறியாளர் கோ.சக்தி தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!