தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. மழை பொய்த்து போனதால் விவசாயம் இந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வற்றாத ஜீவநதிகள் கூட வறண்டு மேடாக காட்சியளிக்கிறது. இதனால் தமிழகத்தில் வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து பெரம்பலூரில் உள்ள மதனகோபால சுவாமி கோயிலில், பெரம்பலூர் அதிமுக நகர கழகம் சார்பில் சிறப்பு யாகம் நடைபெற்றது. மேலும், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் வருண ஜபம் ஹோமம், ஸ்ரீருத்ராபிஷேகம் நடைபெற்றது.
யாகங்களுக்கு குன்னம் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான ஆர்.டி.ஆர். ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றியச் செயலர்கள் ஆலத்தூர் என்.கர்ணன், வேப்பந்தட்டை என்.சிவப்பிரகாசம், நகர நிர்வவாகிகள், பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.