Sridhar In Perambalur work as Project director of the DRDA


பெரம்பலூர் திட்ட இயக்குநராக பணியாற்றி வந்த சிவராமன் வேலூர் மாவட்ட மகளிர் திட்ட அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 15.02.2017 அன்று பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் புதிய திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீதர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநருக்கு, வளர்ச்சித் துறை, வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இவர் இதற்கு முன்பாக தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!