Poisonபெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அனுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி மகன் செல்வராஜ்(வயது15). அனுக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி செல்லும் நேரங்கள் போக மற்ற ஓய்வு நேரங்களில் தந்தை மணிக்கு உதவியாக ஆடு மேய்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்று வந்த செல்வராஜ் ஆடு மேய்க்க சென்றுள்ளார். அங்கு வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த களைக்கொல்லி (விஷம்) மருந்தை எடுத்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் செல்வராஜை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குபதிவு செய்து மாணவன் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!