Tamil Nadu untouchability movement protest

பெரம்பலூர் அருகே உள்ள திருப்பெயர் கிராமத்தில் இரு தரப்பினருக்கு ஏற்பட்ட மோதலில், தலித்துகள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியும், சமூக புறக்கணிப்பு செய்வதை தடுத்து நிறுத்தக் கோரியும், வன்கொடுமை தடுப்பு சட்டப்படி தீருதவி வழங்க கோரியும் மாவட்டக் குழு பி.முத்துசாமி தலைமையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பெரம்பலூர் வட்டச் செயலாளர் எஸ்.பி.டி ராஜாங்கம், மெய்யழகன், செல்வராஜ், ராமச்சந்திரன், உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி எம். சின்னதுரை சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் மணிவேல், மாவட்டத் தலைவர் என். செல்லத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!