Tea shop on fire; Gas cylinder leak near Perambalur.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் மெயின் ரோட்டில், கலியமூர்த்தி என்பவர் சொந்தமாக டீக்கடை நடத்தி வருகிறார்.

இன்று கடை திறந்து வியாபாரம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது, அடுப்பில் எரிந்து கொண்டிருந்த கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் திடீர் தீ பற்றி எறிந்தது.

இதில், ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் மற்றும் வேப்பூர் தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து வந்து தீயணைத்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!