The father requested to the collector : dead body of son deceased abroad || வெளிநாட்டில் இறந்த வாலிபரின் உடலை மீட்டுத் தரக்கோரி தந்தை கலெக்டரிடம் மனு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை நடுத் தெருவை சேர்ந்தவர் பரஞ்சோதி. இவரது மகன் வெங்கடேஷ் (வயது 22), கடந்த ஆண்டுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு கடந்த ஏப்.26 ம் தேதியன்று கடைவீதியில் பொருட்கள் வாங்க சென்றவர் விபத்திற்குள்ளானதாக அங்கிந்து அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இறந்த தனது மகன் வெங்கடேசனின் உடலை மீட்டுத் தரக்கோரி இன்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் தந்தை பரஞ்சோதி மனு கொடுத்தார். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!