the Missing Farmer found dead in a well near by PERAMBALUR

வி.களத்தூர் அருகே வயலுக்கு சென்ற போது மாயமான விவசாயி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
waterlog

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள பசும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் சென்னான் மகன் ராமநாதன்(65), விவசாயியான இவர் நேற்று முன்தினம் காலை வயலுக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து அவரது குடும்பத்தார் ராமநாதனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைத்திடாததால், ஒருவேளை கிணற்றில் தவறி விழுந்து ராமநாதன் உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் அவரை ஊர்பொது மக்கள் மற்றும் பெரம்பலூர் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் தேடி வந்தனர்.

நீண்ட நேர தேடுதல் பணிக்கு பின்னர் ராமநாதன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ராமநாதனின் மகன் முருகேசன்(40) அளித்த புகாரின் பேரில் வி.களத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!