பெரம்பலூர் :குரும்பலூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் உள்ள சின்னான்குளம் ஏரிக்கரையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தார்.
இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.
இது குறித்து தகவலறிந்த பெரம்பலுõர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.