பெரம்பலூர் தாலுகாவில் காலியாக உள்ள 4 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதிஉடையோர் விண்ணப்பிக்கலாம் – பெரம்பலூர் வட்டாட்சியர் செல்வராஜ் தகவல்

பெரம்பலூர் தாலுக்காவில் காலியாக உள்ள 4 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு எதிர்வரும் 25.09.2015 அன்று காலை 11.00 மணியளவில் பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது. மேற்கண்ட கிராம உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

விண்ணப்பிக்கும் நபர்கள் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவெண்டும். 21 வயது நிரம்பியவராகவும்,30 வயதுக்கு உட்பட்டவராகவும் அட்டவணை வகுப்பினர் பழங்குழயினர் 35 வயதுக்கு உட்பட்டவராகவும், பிற்படுத்தப்பட்டோர் மிகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

மிதிவண்டி ஓட்ட தெரியவெண்டும், நன்னடத்தைசான்று மற்றும் உடல் தகுதி சான்று சமர்பிக்கவெண்டும். தகுதியஜடைய நபர் திருமணமானவராக இருப்பின் ஒரு திருமணத்திற்கு மேல் செய்தவராக இருத்தல் கூடாது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வெண்டும்

மேற்கண்ட தகுதிய உடைய நபர்கள் தங்களது அசல் சான்று ஆவணங்களுடன் மற்றும் இரண்டு சான்றொப்பம் இடப்பட்ட நகல்கள் ஆகியவற்றுடன் நேர்காணலில் கலந்துட கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு பெரம்பலூர் வட்டாட்சியரை 9445000610 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!